வணக்கம்,
பெற்றோர்களாகிய நாம் வீட்டுகல்வி முறையை பின்பற்ற பல வழிகள் உள்ளன.
பெரும்பாலான பெற்றோருக்கு வீட்டு கல்விமுறையின் நன்மைகள் பற்றி அறியாமல் உள்ளனர்.
ஒரு குழந்தையை நாம் வீட்டு கல்வி மூலம்
பாடங்களை கற்பிக்கும் போது அவர்கள் மிகவும் வேகமாக தெளிவாகவும் அவர்களின் பாடங்களை எளிதாக கற்க முடியும். இதற்கு பல காரணங்கள் உள்ளன!
நாம் ஒரு விஷயத்தை சுதந்திரமாக செய்யும் பொழுது அதை
நிதானமாகவும் எளிதாகவும் செய்ய முடியும். அதே போல தான் சுதந்திரமாக குழந்தைகள் பாடங்களை அவர்களாகவே கற்கும் பொழுது அவர்கள் மிகவும் வேகமாகவும் சுதந்திரமாகவும் எளிதாகவும் அதைவிட மிக ஆர்வமாகவும் தங்கள் பாடங்களை கற்றுக் கொள்வார்கள்.
எதில் சுதந்திரம் இருக்கிறதோ இல்லையோ கல்விமுறையில் கண்டிப்பாக குழந்தைகளுக்கு சுதந்திரம் தேவை.
குழந்தைகள் தாங்கள் விரும்பும் பாடங்களை அவர்கள் விரும்பும் நேரத்தில்
கற்றுக்கொள்ள வீட்டு கல்வி முறை ஒரு சிறந்த முறையாகும்.
சில குழந்தைகள் தமிழிலும், சில குழந்தைகள் ஆங்கிலத்திலும், சில குழந்தைகள் அறிவியலிலும், சில குழந்தைகள் கணிதத்திலும், கெட்டிக்காரர்களாக இருப்பார்கள்.
குழந்தைகள் எந்த பாடங்களில் எந்த ஆக்டிவிட்டியில் தங்களை ஈடுபடுத்திக் கொள்கிறார்கள் என்று கண்டறிய வீட்டு கல்வி முறை நமக்கு வழிவகுக்கிறது.
குழந்தைகள் அவர்கள் விரும்பும் வண்ணம் ஆக்டிவிட்டி முறையிலோ அல்லது ஒருசில கரிக்குலம், சிலபஸ் முறையிலோ அவர்களுக்கு நாம் எளிமையாக சொல்லிக் கொடுக்க முடியும்.
எப்படி இருந்தாலும் குழந்தைகள் விரும்பும் வண்ணம் நாம் எவற்றை கற்றுக் கொடுத்தாலும் அவர்கள் எளிதாகவும்
மிக ஆர்வத்துடனும் கற்றுக் கொள்வார்கள்.
குழந்தைகள் தாங்கள் சுதந்திரமாக அவர்களின் சந்தேகங்களை தங்கள் பெற்றோரிடம் கேட்டு அறிந்து கொள்ள வீட்டு கல்வி முறை உதவுகிறது.
அதுமட்டுமல்ல குழந்தைகள் தாங்கள் மிகவும் நிதானமாக தங்களின் பாடங்களை கற்றுக் கொள்ள வீட்டு கல்வி முறை சிறந்த வழியாகும்.
*ஏனென்றால் அவர்களின் அட்டவணையை அவர்களே தயார் செய்து கொள்ளலாம்.
*தாங்கள் விரும்பும் பாடங்களை தாங்கள் விரும்பும் நேரத்தில் கற்றுக் கொள்ளலாம்.
*தங்களுக்கு வரும் சந்தேகங்களை எளிதாகவும் சுதந்திரமாகவும் தங்களின் பெற்றோரிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம்.
இது போன்ற பல நன்மைகள் வீட்டு கல்வி முறையில் குழந்தைகளுக்கு கிடைக்கின்றன.
ஒரு குழந்தையை எப்படி வீட்டிலேயே வைத்து கற்றுக்கொடுப்பது என்ற கேள்வி போய் இப்போது அனைத்துக் குழந்தைகளும் வீட்டில் இருந்துதான் தங்கள் பாடங்களை பள்ளிக் கல்வி முறையிலும் கற்கிறார்கள்.
இப்போதெல்லாம் மாறி வரும் சமுதாயத்திற்கு ஏற்றவாறு நாம் மாற்றிக் கொண்டுதான் நம் பாதையில் கடந்து செல்கிறோம். அதனால் வீட்டு கல்வி முறையும் ஒரு அழகான மாற்றமே!
பள்ளிக் கல்வி முறை சிறந்ததா?
அல்லது வீட்டு கல்வி முறை சிறந்ததா?
என்று கேட்டால் குழந்தைகள் சுதந்திரமாக எல்லாவற்றையும் கற்கும் முறையே சிறந்தது என்று தான் கூறமுடியும்.
மேலும் வீட்டுக் கல்வியின் பல சிறந்த கருத்துக்களுடன் அடுத்த பதிவில் உங்களை சந்திக்கிறேன்.
வீட்டுக்கல்விமுறை(Homeschooling) பற்றி மேலும் அறிய
Click Here 👉👉வீட்டுக்கல்வி/ Homeschooling
உங்கள்,

Comments
Post a Comment